Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்டம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்டம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்டம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்டம்

ADDED : மார் 11, 2025 11:52 PM


Google News
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலின் மாசி மகத் தேர்த்திருவிழா கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்தாம் தேதி வரை ஒவ்வொரு நாளும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நேற்று முன்தினம் பெட்டத்தம்மன் மலையிலிருந்து அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுக தேங்காய்களை உடைத்து, அம்மன் சுவாமியை வரவேற்றனர். காரமடை நகரில் கோவை சாலையில் அம்மன் சுவாமி வந்தபோது, அரங்கநாதர் கோவிலில் இருந்து, அர்ச்சகர் ஒருவர் ராம பானத்தை எடுத்துச் சென்று, அம்மன் சுவாமியை வரவேற்று கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

நேற்று திருக்கல்யாணம் வைபவத்தின் முக்கிய நிகழ்வான ஸ்ரீதேவி பூதேவிக்கு அர்ச்சகர்கள் மாங்கல்யம் அணிவித்தனர். தொடர்ந்து அர்ச்சகர்கள் சுரேஷ் நாராயணன், திருவேங்கடம் ஆகியோர் மாலைகளை எடுத்துச் சென்று, பக்தர்கள் மத்தியில் நடனமாடி வந்து, ஸ்ரீதேவி பூதேவிக்கு மாலை மாற்றினர்.

இது மாதிரி மூன்று முறை மாலை மாற்றுதல் நடந்தது. பின்பு நெய்வேத்தியம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்பு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

தேரோட்டம்


இன்று காலை, 5:30 மணிக்கு கோவிலில் இருந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:30 மணிக்கு தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன், கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி மற்றும் அர்ச்சகர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us