Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திருடர்கள் ஜாக்கிரதை !  வீடுகளுக்கு பர்குலர் அலாரம் 

திருடர்கள் ஜாக்கிரதை !  வீடுகளுக்கு பர்குலர் அலாரம் 

திருடர்கள் ஜாக்கிரதை !  வீடுகளுக்கு பர்குலர் அலாரம் 

திருடர்கள் ஜாக்கிரதை !  வீடுகளுக்கு பர்குலர் அலாரம் 

ADDED : ஜூன் 21, 2024 01:19 AM


Google News
நம் உறவுகள் நிம்மதியாக வீடுகளில் உறங்க பாதுகாப்பு என்பது மிக முக்கியம். வீடு கட்டும் போதே, சி.சி.டி.வி., பர்குலர் அலாரம் போன்ற பாதுகாப்பிற்கும் பட்ஜெட் ஒதுக்கிவிட்டால், இல்லங்களின் பாதுகாப்பை நாம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உறுதி செய்துகொள்ள முடியும்.

அவசியமுள்ளவர்களின் வீடுகளுக்கே வந்து, சி.சி.டி.வி., பர்குலர் அலாரம் பொருத்திக்கொடுக்கின்றனர் கோவை டாடாபாத் எட்டாம் வீதியில் அமைந்துள்ள சித்தார்த் அசோசியேட்ஸ் நிறுவனத்தினர். லேட்டஸ்ட் நவீன மாடல்களில் கேமரா, பர்குலர் அலாரங்கள் இங்கு கிடைக்கின்றன. சோலார் கேமராக்களில், நடமாட்டத்தை கண்காணிக்க ரோட்டேட்டபுள், ஜூம் லென்ஸ், ஆட்டோ டிராக்கிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. மோசன் டிடெக்சன் ஆன உடனே, நம் மொபைல் போனுக்கு நோட்டிபிகேசன் வந்துவிடும்.

குறைந்த சூரிய ஒளியிலும் பவரை சேமித்து, இரவு, மழைக்காலங்களிலும் தடையின்றி இயங்கும். மின் இணைப்பு இல்லாததால், வாடிக்கையாளர்களே எளிதாக பொருத்தலாம், வேறு இடத்திற்கு மாற்றலாம். இதேபோல், பர்குலர் அலாரம் மூலம் கதவை திறக்க முயலும் போது, 110 டெசிபள் சத்தத்தில் 100 மீட்டர் சுற்றளவிற்கு அலாரம் அடிக்கும். மேலும், பதிவு செய்து ஐந்து எண்களுக்கு அழைப்பும் செல்லும்.

இரவு அலாரத்தை ஆன் செய்து, காலையில் ஆப் செய்யலாம். மெபைல் போன் மூலம் எந்த இடத்திலிருந்தும் அலாரத்தை ஆன், ஆப் செய்ய முடியும். இனி திருடர்கள் பயமின்றி, வெளியூர்களுக்கு சென்று வரலாம் என்கிறார் இதன் உரிமையாளர் ரெஜிஷ்.

அவசியமுள்ளவர்கள் 97505 83993, 90922 33332 மொபைல் எண்ணில் அழைக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us