Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'கலையும் கைவண்ணமும்' பயிற்சி பெண்கள், குழந்தைகள் மகிழ்ச்சி!

'கலையும் கைவண்ணமும்' பயிற்சி பெண்கள், குழந்தைகள் மகிழ்ச்சி!

'கலையும் கைவண்ணமும்' பயிற்சி பெண்கள், குழந்தைகள் மகிழ்ச்சி!

'கலையும் கைவண்ணமும்' பயிற்சி பெண்கள், குழந்தைகள் மகிழ்ச்சி!

ADDED : ஜூன் 03, 2024 01:36 AM


Google News
Latest Tamil News
துடியலூர்;கோடை விடுமுறையை பெண்களும், குழந்தைகளும் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்ற நோக்கில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'கலையும் கைவண்ணமும்' என்ற கோடைகால இலவச ஓவியம் வரைதல் ஆபரண தயாரிப்பு பயிற்சி, கோவை அபார்ட்மென்ட்களில் நடத்தப்பட்டு வருகிறது.

துடியலூரில், காசா கிராண்ட் காஸ்மாஸ் குடியிருப்பு வளாகத்தில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'கலையும் கைவண்ணமும்' ஓவிய பயிற்சி, கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. குழந்தைகளும் பெண்களும், உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

பெவிக்ரில் நிறுவனத்தைச் சேர்ந்த சுமிதா, ஆர்த்தி ஆகியோர் ஓவிய பயிற்சி, வெட்டி ஓட்டுதல், பசைகளை பயன்படுத்தும் முறை, வண்ணங்களை தேர்வு செய்தல், வண்ணங்களை பூசுதல் குறித்து, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் கற்றுக் கொடுத்தனர். குழந்தைகள் இந்த ஓவிய பயிற்சியை கற்று உற்சாகம் அடைந்தனர்.

காசாகிராண்ட் காஸ்மாஸ் குடியிருப்போர் நல சங்கத்தின் செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குஜன்ஸ் ஆருத்ரா அபார்ட்மென்ட்


தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள குஜன்ஸ் ஆருத்ரா அப்பார்ட்மென்டில் ஓவியம் வரைதல், ஆபரண தயாரிப்பு ஆகிய பயிற்சி வகுப்புகள் நடந்தன. அபார்ட்மென்டில் உள்ள குழந்தைகள், பெண்கள், இல்லத்தரசிகள் உற்சாகத்துடன் பயிற்சி பெற்றனர்.

இவர்களுக்கு, 'பெவிகிரில்' நிறுவனத்தின் முன்னணி ஓவிய வல்லுனர்கள் மற்றும் சிறந்த ஆபரண தயாரிப்பாளர்கள், பயிற்சி அளித்தனர்.

ஆருத்ரா வெல்பேர் அசோசியேஷன் இணைச் செயலாளர் அசோக்குமார், தலைவர் வாசுதேவன், முன்னாள் தலைவர்கள் நந்தகோபால், முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ தக் ஷா சான்ஸ்ரே பேஸ் 2


வடவள்ளி, தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ தக் ஷா சான்ஸ்ரே பேஸ் 2 அபார்ட்மென்டில் நடந்த பயிற்சியில், கேரளா முரல் பெயின்டிங்கில், கிருஷ்ணர் மற்றும் அன்னப்பறவை வரைதல், ஆப்பிரிக்க ஓவியங்கள் வரைதல், பென்டென்ட் ஆபரணம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சான்ஸ்ரே பேஸ் 2 பிளாட் ஓனர்ஸ் அசோசியேசன் பொருளாளர் சங்கரநாராயணன், ஒருங்கிணைப்பாளர் தேவி, தலைவர் ராஜாமணி, செயலாளர் ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'வரும் ஆண்டும் தொடர வேண்டும்'

போட்டியில் பங்கேற்ற தருண் வைபவ் கூறுகையில், ''இந்த கோடை விடுமுறையில் ஓவிய பயிற்சி பெற்றது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஆண்டும் இந்நிகழ்ச்சி தொடர வேண்டும். அதில் பங்கேற்க ஆவலாக உள்ளேன்,'' என்றார்.இல்லத்தரசி ரம்யா கூறுகையில், ''இந்த ஓவிய பயிற்சி, எனக்குள் இருக்கும் ஓவிய ஆர்வத்தையும், திறமையையும் வெளிப்படுத்தியது. இதில் பங்கேற்றது மகிழ்ச்சி தருகிறது. பயிற்சி, எனக்குள் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.இல்லத்தரசி சத்தியபிரியா கூறுகையில், ''தினமலர் நாளிதழ் நடத்திய ஓவிய பயிற்சியில், நண்பர்களுடன் கலந்து கொண்டதால், மனது லேசாக இருக்கிறது. அதோடு, ஓவியம் வரைவதில் ஈடுபாடும் அதிகரித்துள்ளது.பள்ளி மாணவி தீக் ஷிதா கூறுகையில், ''ஓவியம் வரைதல், ஆபரணம் தயாரிக்க பயிற்சியாளர்களும், பொறுமையாகவும், எளிமையாக பயிற்சி கொடுத்தனர். இதனால், எங்கள் கோடை விடுமுறை பயனுள்ளதாக அமைந்துள்ளது,'' என்றார்.இல்லத்தரசி பூர்ணிமா கூறுகையில், ''தினமலர் நடத்திய ஓவிய பயிற்சியால், நாங்கள் மீண்டும் பள்ளி பருவத்திற்கு சென்றது போல மகிழ்ச்சியாக உள்ளது. வீட்டில் இருக்கும் எங்களுக்கு, ஒரு பொழுதுபோக்காகவும், மன அழுத்தத்தை போக்கும் விதமாகவும் பயிற்சி அமைந்துள்ளது,'' என்றார்.பள்ளி மாணவி அகமியா கூறுகையில், ''கோடை விடுமுறையில், வெறும் பொழுதை மட்டும் கழித்து மீண்டும் பள்ளிக்கு சென்றதாக இல்லாமல், வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில், ஓவியம் மற்றும் ஆபரண தயாரிப்பு பயிற்சி இருந்தது. புதியதாக ஒன்றை கற்றுக் கொண்டதால், என்னுள் புத்துணர்வு ஏற்பட்டது போல உள்ளது,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us