/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
ADDED : ஜூலை 08, 2024 11:37 PM
சூலூர்;குப்பையை பயனுள்ளதாக மாற்றிய, அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
'கோ கிரீன்' அமைப்பு சார்பில், குப்பையை பயனுள்ளதாக மாற்றும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. அதில், பங்கேற்ற வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், குப்பையை பல்வேறு பயனுள்ள பயன்பாட்டுக்கு மாற்றி காட்டி பாராட்டை பெற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.