Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொது மக்கள் குறைதீர் முகாமில் 79 மனுக்களுக்கு சுமுகமான தீர்வு

பொது மக்கள் குறைதீர் முகாமில் 79 மனுக்களுக்கு சுமுகமான தீர்வு

பொது மக்கள் குறைதீர் முகாமில் 79 மனுக்களுக்கு சுமுகமான தீர்வு

பொது மக்கள் குறைதீர் முகாமில் 79 மனுக்களுக்கு சுமுகமான தீர்வு

ADDED : ஆக 01, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
கோவை : கோவை எஸ்.பி., தலைமையில், நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில், 79 மனுக்களுக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.

மாவட்ட போலீசார் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது விசாரணையும், ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்கள் மீது மறுவிசாரணையும் செய்துவருகின்றனர்.

நேற்று கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில் மக்கள் குறைதீர் முகாம் நடந்தது.

இதில், மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் தீர்வு காணப்பட்டது.

நேற்றைய முகாமில் குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்றம் மற்றும் இடப்பிரச்னை தொடர்பான, 102 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை செய்யப்பட்டது.

இதில், மூன்று மனுக்கள் மீது சி.எஸ்.ஆர்., பதிவு செய்யப்பட்டது. மேலும், 79 மனுக்களுக்கு சுமுகமான முறையிலும், 20 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us