/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விவசாய செய்தி தக்காளி வரத்து அதிகரித்தது விலையில் ஏற்பட்டது மாற்றம் விவசாய செய்தி தக்காளி வரத்து அதிகரித்தது விலையில் ஏற்பட்டது மாற்றம்
விவசாய செய்தி தக்காளி வரத்து அதிகரித்தது விலையில் ஏற்பட்டது மாற்றம்
விவசாய செய்தி தக்காளி வரத்து அதிகரித்தது விலையில் ஏற்பட்டது மாற்றம்
விவசாய செய்தி தக்காளி வரத்து அதிகரித்தது விலையில் ஏற்பட்டது மாற்றம்
ADDED : ஜூலை 08, 2024 01:48 AM
கிணத்துக்கடவு, ஜூலை 8--
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்து, விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
காய்கள் விலை நிலவரம் குறித்து, வியாபாரிகள் கூறியதாவது,
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று தக்காளி பெட்டி (15 கிலோ) 500, தேங்காய் 16 (ஒன்று), கத்தரிக்காய் (கிலோ) - 62 , முருங்கைகாய் - 120, வெண்டைக்காய் - , முள்ளங்கி - 32, வெள்ளரிக்காய் - 15, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - 15, பாகற்காய் -55, புடலை - 30, சுரைக்காய் - 23, பீக்கங்காய் - 60, பீட்ரூட் - 55, அவரைக்காய் - 125, பச்சை மிளகாய் - 135 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கடந்த வாரத்தை விட, தற்போது காய்களின் விலை மாறுபட்டுள்ளது. இதில், தேங்காய் (ஒன்று) - 3 ரூபாய், முருங்கைக்காய் (கிலோ) - 10, புடலை மற்றும் பீட்ரூட் - 5, பச்சை மிளகாய் - 25, அவரைக்காய் - 30 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. வெண்டைக்காய் - 15, பீங்கன்காய் - 10 ரூபாய் விலை சரிந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தில் இருந்த தக்காளி வரவை விட தற்போது இருமடங்கு அதிகரித்துள்ளது' என்றனர்.