Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 55 கிலோ  புகையிலை பொருட்கள் பறிமுதல்

55 கிலோ  புகையிலை பொருட்கள் பறிமுதல்

55 கிலோ  புகையிலை பொருட்கள் பறிமுதல்

55 கிலோ  புகையிலை பொருட்கள் பறிமுதல்

ADDED : ஜூலை 22, 2024 01:14 AM


Google News
கோவை:காந்திபுரம் அருகே, 55 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

காந்திபுரம் அருகே சத்தி ரோடு, சி.கே. காலனி உள்ளிட்ட இடங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக, காட்டூர் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சி.கே.காலனியில், 55.986 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, விற்பனைக்காக வைத்திருந்த திருப்பூர், காங்கேயம் ரோடு, ஆர்.வி.இ., நகரை சேர்ந்த செல்வக்கண்ணனை,38, கைது செய்தனர்.

இவர், சங்கனுாரில் தங்கி கடைகளுக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை, விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us