Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 34 சவரன் தங்க நகை மோசடி: பட்டறை உரிமையாளர் கைது

34 சவரன் தங்க நகை மோசடி: பட்டறை உரிமையாளர் கைது

34 சவரன் தங்க நகை மோசடி: பட்டறை உரிமையாளர் கைது

34 சவரன் தங்க நகை மோசடி: பட்டறை உரிமையாளர் கைது

ADDED : ஜூலை 30, 2024 10:46 PM


Google News
கோவை:கோவையில், 34 சவரன் தங்க நகை மோசடி செய்தது தொடர்பாக நகைப்பட்டறை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, சலீவன் வீதியை சேர்ந்தவர் தீபங்கர் கஜிரா,31. தங்க நகை பட்டறை உரிமையாளரான இவரிடம் தெலுங்கு விதியைச் சேர்ந்த மற்றொரு தங்க நகை பட்டறை உரிமையாளரான ரனஜித் ராய்,29, என்பவர் கடந்த, 2020ம் ஆண்டு அக்., 10ம் தேதி, 34 சவரன் தங்க நகையை ஒரு மணி நேரத்தில் திருப்பித் தருவதாக வாங்கியுள்ளார்.

ஆனால், கூறியபடி தராத நிலையில் தீபங்கர் கஜிரா, ரனஜித் ராயிடம் கேட்டபோது, சுகதேவ் என்பவரிடம் கொடுத்துள்ளதாகவும், அதை திரும்ப வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை அவர் நகையை தராததால் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் தீபங்கர் கஜிரா புகார் அளித்தார். இதையடுத்து ரனஜித் ராயை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சுகதேவ் என்பவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us