Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 10.2 கோடி லிட்டர் தண்ணீர் சிறுவாணியில் எடுக்கப்பட்டது

10.2 கோடி லிட்டர் தண்ணீர் சிறுவாணியில் எடுக்கப்பட்டது

10.2 கோடி லிட்டர் தண்ணீர் சிறுவாணியில் எடுக்கப்பட்டது

10.2 கோடி லிட்டர் தண்ணீர் சிறுவாணியில் எடுக்கப்பட்டது

ADDED : ஜூலை 25, 2024 11:22 PM


Google News
கோவை : சிறுவாணி அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வரும் நிலையில், குடிநீர் தேவைக்காக, 10.2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.

கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது சிறுவாணி அணை. பாதுகாப்பு காரணங்களை கூறி கேரள நீர்பாசனத்துறை துறை அணையின் முழுக்கொள்ளளவான, 50 அடி நீர் தேக்காமல், 45 அடி வரை மட்டுமே நீர்தேக்கி வருகிறது.

கடந்த வாரம், 42 அடி நீர் தேங்கிய போதே, அணையில் இருந்து, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இது தமிழக அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் மழைப்பொழிவு குறைந்ததால், நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. கடந்த இரு தினங்களாக, மழைப்பொழிவு இருந்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அடிவாரத்தில், 40 மி.மீ., மற்றும். அணைப்பகுதியில், 32 மி.மீ., மழைப்பொழிவு பதிவானது. அணையின் நீர்மட்டம், 42.77 அடியாக இருந்தது. அணையில் இருந்து 10.217 கோடி லிட்டர் நீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டது.

அணைப்பகுதியில் தொடர்ந்து மழை இருப்பதால், அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us