Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ துணை நடிகையுடன் வாழ்ந்த சொமேட்டோ ஊழியர் தற்கொலை

துணை நடிகையுடன் வாழ்ந்த சொமேட்டோ ஊழியர் தற்கொலை

துணை நடிகையுடன் வாழ்ந்த சொமேட்டோ ஊழியர் தற்கொலை

துணை நடிகையுடன் வாழ்ந்த சொமேட்டோ ஊழியர் தற்கொலை

ADDED : ஜூன் 07, 2025 12:25 AM


Google News
ஆவடி, ஆவடி, கோவில்பதாகை, கிருபா நகரைச் சேர்ந்தவர் சந்துரு, 21. இவர், உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், 25 வயது துணை நடிகைக்கும் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஐந்து மாதங்களாக, இருவரும் 'லிவிங் டுகெதர்' முறையில் வாழ்ந்து வந்தனர்.

ஷூட்ங்கிற்கு செல்லாமல் விடுமுறை எடுக்குமாறு, இளம்பெண்ணை நேற்று முன்தினம் காலை சந்துரு வற்புறுத்தியதாக தெரிகிறது. அதை பொருட்படுத்தாத அவர், ஷூட்டிங் சென்றதால் மனமுடைந்த சந்துரு, வீட்டின் படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பியதும், சந்துரு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

அதன்படி, போலீசார் அங்கு சென்று, சந்துருவின் உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, நேற்று காலை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us