ADDED : பிப் 12, 2024 01:45 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பல்லவன் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 20. இவரும், பெங்களூரைச் சேர்ந்த சரத்குமார், 25, என்பவரும், இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வழியாக காஞ்சிபுரம் வந்தனர்.
அப்போது, காவலான்கேட்டில் குறுக்கே வந்த நபர் மீது, வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த விக்னேஷ் நேற்று முன்தினம் இறந்தார். சரத்குமார் படுகாயமடைந்தார்.