Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருடிய போனை உரிமையாளரிடமே விற்க முயன்ற வாலிபர் கைது

திருடிய போனை உரிமையாளரிடமே விற்க முயன்ற வாலிபர் கைது

திருடிய போனை உரிமையாளரிடமே விற்க முயன்ற வாலிபர் கைது

திருடிய போனை உரிமையாளரிடமே விற்க முயன்ற வாலிபர் கைது

ADDED : செப் 16, 2025 01:24 AM


Google News
Latest Tamil News
கோயம்பேடு;கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறி கடை உரிமையாளரிடம் திருடிய மொபைல் போனை, அவரிடமே விற்க முயன்ற வாலிபர் வசமாக சிக்கினார்.

கோட்டூர், ஏரிக்கரை சாலையைச் சேர்ந்தவர் உமாசங்கர், 43; கோயம்பேடு சந்தையில் காய்கறி கடை வைத்துள்ளார்.

இவர், நேற்று முன்தினம் அதிகாலை காய்கறி சந்தை வளாகத்தில் வந்த லாரிகளில் இருந்து, கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொண்டிருந்தார்.

அப்போது, அவரது மொபைல் போன் திருட்டு போனது. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், உமாசங்கர் வியாபாரம் முடிந்த பின், காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை இவரது கடைக்கு வந்த இருவர், 'அவசரமாக பணம் தேவைப்படுகிறது. என் மொபைல் போனை வைத்துக்கொண்டு, 8,000 ரூபாய் கொடுங்கள்; பணத்தை திருப்பித் தந்து விட்டு, மொபைல் போனை பெற்றுக் கொள்கிறோம்' எனவும் கூறியுள்ளனர்.

சந்தேகமடைந்த உமா சங்கர், மொபைல் போனை வாங்கி பார்த்தபோது, திருடு போன தன் மொபைல் போன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கடை ஊழியர்கள் உதவியுடன், அவர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது ஒருவர் பிடிபட்டார். அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர், கோயம்பேடைச் சேர்ந்த சந்தோஷ், 23 என, தெரியவந்தது.

அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us