Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பொது 4 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது

பொது 4 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது

பொது 4 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது

பொது 4 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது

ADDED : மே 22, 2025 12:38 AM


Google News
வியாசர்பாடி, வியாசர்பாடியைச் சேர்ந்த 23 வயது பெண், தன் 4 வயது மகளுடன் தனியாக வசித்து, பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்.

கடந்த 14ம் தேதி, வீட்டருகே குடிநீர் பிடிக்க அப்பெண் சென்ற நிலையில், இவரது வீட்டில் புகுந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர், அப்பெண்ணின் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.

தண்ணீர் பிடிக்க சென்ற அப்பெண் திரும்பி வந்த நிலையில், அந்த இளைஞர் தப்பியோடினார். இதையடுத்து, சிறுமிக்கு இரண்டு நாட்களாக கடும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போலீசில் புகார் அளிக்க சிறுமியின் தாய் பயந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் 'குழந்தைகள் உதவி எண்' 1098க்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சமூக அலுவலர் மலர்விழி, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, வியாசர்பாடி, காந்திபுரத்தைச் சேர்ந்த சக்திவேல், 18, என்பரை, நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us