/உள்ளூர் செய்திகள்/சென்னை/வீட்டை விட்டு வந்த இளம்பெண் 3 மாதத்திற்கு பின் ஒப்படைப்புவீட்டை விட்டு வந்த இளம்பெண் 3 மாதத்திற்கு பின் ஒப்படைப்பு
வீட்டை விட்டு வந்த இளம்பெண் 3 மாதத்திற்கு பின் ஒப்படைப்பு
வீட்டை விட்டு வந்த இளம்பெண் 3 மாதத்திற்கு பின் ஒப்படைப்பு
வீட்டை விட்டு வந்த இளம்பெண் 3 மாதத்திற்கு பின் ஒப்படைப்பு
ADDED : ஜன 11, 2024 01:00 AM
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கடந்த செப்., 5ம் தேதி 19 வயது பெண் ஆதரவின்றி நின்று கொண்டிருந்தார்.
அவரை சென்னை காவல் துறையில் செயல்பட்டு வரும், ஆதரவற்றோருக்கான 'காவல் கரங்களைச்' சேர்ந்தவர்கள் மீட்டு, பாதுகாப்பாக காப்பகத்தில் தங்க வைத்து பராமரித்து வந்தனர்.
அந்நேரம், அவரது பெயர் நந்தினி என தெரிவித்தவர், வேறு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால், கடந்த மூன்று மாதங்களாக சாந்தோமில் உள்ள காப்பகத்தில் சேர்த்துவிடப்பட்டார். போலீசாரும் தொடர்ந்து விசாரித்தனர்.
இந்த நிலையில், நந்தினி 'தான் ஆந்திரா மாநிலம், சித்துார் மாவட்டம் குப்பம் மாடல் காலனியைச் சேர்ந்தவர்' என, போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும், தாய் மாமாவான வினய் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்தாண்டு செப், 1ம் தேதி பாட்டியிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திரா மாநிலம், குப்பம் நகர காவல் நிலையத்தில் அவரது தந்தை முருகேஸ் மகள் நந்தினி காணாமல் போனது குறித்து புகார் அளித்து இருந்ததும் தெரியவந்தது.
நேற்று முன்தினம் அவரது பெற்றோரை வரவழைத்த போலீசார், நந்தினியை அவர்களிடம் ஒப்படைத்தனர். சிறப்பாக செயல்பட்ட காவல் கரங்கள் குழுவினரை, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் பாராட்டினார்.