/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கத்திப்பாரா மேம்பால சுவரில் கார் மோதி பெண் படுகாயம் கத்திப்பாரா மேம்பால சுவரில் கார் மோதி பெண் படுகாயம்
கத்திப்பாரா மேம்பால சுவரில் கார் மோதி பெண் படுகாயம்
கத்திப்பாரா மேம்பால சுவரில் கார் மோதி பெண் படுகாயம்
கத்திப்பாரா மேம்பால சுவரில் கார் மோதி பெண் படுகாயம்
ADDED : மே 22, 2025 12:09 AM

கிண்டி ராமாபுரம், டி.எல்.எப்., வளாகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நான்கு பேர், திருவொற்றியூரில் இருந்து, நேற்று காலை கால்டாக்சி காரில், ராமாபுரம் நோக்கி புறப்பட்டனர்.
காரை, முகப்பேரை சேர்ந்த வினித், 28, ஓட்டி சென்றார். கிண்டி, கத்திப்பாரா மேம்பாலத்தில் ஏறி இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தடுப்பு சுவரில் கார் மோதியது.
இதில், சீதா என்ற பெண் ஊழியர் காயமடைந்தார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
இச்சம்பவத்தால், கத்திப்பாரா மேம்பாலத்தில், ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.