Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/திருமணமான 7 மாதத்தில் பெண் தற்கொலை

திருமணமான 7 மாதத்தில் பெண் தற்கொலை

திருமணமான 7 மாதத்தில் பெண் தற்கொலை

திருமணமான 7 மாதத்தில் பெண் தற்கொலை

ADDED : ஜன 12, 2024 11:57 PM


Google News
சேலையூர், சேலையூரை அடுத்த பாரத் நகரைச் சேர்ந்தவர் காசி, 23. இவரது மனைவி ரேணுகா, 21. இவர்களுக்கு திருமணமாகி, ஏழு மாதங்கள் ஆகின்றன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ரேணுகா, நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை.

சந்தேகமடைந்து, கதவை உடைத்து பார்த்தபோது, துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது.

சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி ஏழு மாதங்களே ஆவதால், தாம்பரம் ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us