/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கார் ஓட்டுநரை ஏமாற்றி பண மோசடி: பெண் கைது கார் ஓட்டுநரை ஏமாற்றி பண மோசடி: பெண் கைது
கார் ஓட்டுநரை ஏமாற்றி பண மோசடி: பெண் கைது
கார் ஓட்டுநரை ஏமாற்றி பண மோசடி: பெண் கைது
கார் ஓட்டுநரை ஏமாற்றி பண மோசடி: பெண் கைது
ADDED : செப் 14, 2025 02:52 AM
அம்பத்துார்:கார் ஓட்டுநரை காதலிப்பதாக ஏமாற்றி, அவர் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த, 3.50 லட்சம் ரூபாயை, 'ஆட்டை' போட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார், 35; கார் ஓட்டுநர். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவ செலவிற்காக, கார் ஓட்டுவதில் கிடைக்கும் பணத்தை, சேர்த்து வைத்திருந்துள்ளார்.
இவருக்கு, சூரப்பட்டு அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்த 27 வயது இளம் பெண்ணுடன், கடந்தாண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அப்பெண் கேட்டதை அடுத்து, தன் மருத்துவ செலவுக்காக சேர்த்து வைத்த 3.50 லட்சம் ரூபாயை, விஜயகுமார் அவருக்கு கொடுத்துள்ளார்.
ஆனால், திருமண பேச்சு துவங்கியபோது, அப்பெண் முட்டுக்கட்டை போட்டுள்ளார். அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே, அதிர்ச்சியடைந்த விஜயகுமார், கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால், அப்பெண் பணத்தை திருப்பி தரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விஜயகுமார், இது குறித்து கடந்த மாதம் அம்பத்துார் போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், அப்பெண் பணமோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். பணத்தை திருப்பி வழங்குவதாக அவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜாமினில் விடுவித்தனர்.