Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கணவருடன் தகராறு 6வது மாடியிலிருந்து குதித்த மனைவி

கணவருடன் தகராறு 6வது மாடியிலிருந்து குதித்த மனைவி

கணவருடன் தகராறு 6வது மாடியிலிருந்து குதித்த மனைவி

கணவருடன் தகராறு 6வது மாடியிலிருந்து குதித்த மனைவி

ADDED : மே 21, 2025 12:42 AM


Google News
வியாசர்பாடி :சென்னை அடையார், கஸ்துாரிபாய் நகரை சேர்ந்தவர் ஆண்டனி, 30; இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளன.

இவரது முதல் மனைவி கொரோனாவில் உயிரிழந்த நிலையில், இரண்டாவதாக ரம்ஜான் பீவி, 25 என்பவரை, 11 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

ரம்ஜான் பிவிக்கு, இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு 5 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில், ஆண்டனிக்கும், ரம்ஜான் பீவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆண்டனியிடம் கோபித்துக்கொண்டு நேற்று, வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகரில் உள்ள தாய் வீட்டிற்கு, ரம்ஜான் பீவி சென்றார். அவரை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல, ஆண்டனி சென்றார்.

மீண்டும் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. திடீரென வீட்டின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து, ரம்ஜான் பீவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us