Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மனைவியை வெட்டிய கணவருக்கு வலை

மனைவியை வெட்டிய கணவருக்கு வலை

மனைவியை வெட்டிய கணவருக்கு வலை

மனைவியை வெட்டிய கணவருக்கு வலை

ADDED : ஜன 29, 2024 01:27 AM


Google News
ஆர்.கே.நகர்:ஆர்.கே.நகர், சின்னசாமி தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ், 25; ஆட்டோ ஓட்டுனர்.

இவரது மனைவி ஜீவிதா, 21. மகன், மகள் உள்ளனர். லோகேஷ் நேற்று குடிபோதையில், வேறு ஒரு பெண்ணை அழைத்து வந்து, தன் வீட்டில் தங்க வைத்துள்ளார்.

இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில், ஆத்திரமடைந்த லோகேஷ், கத்தியால் ஜீவிதாவின் பின் தலையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜீவிதாவை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us