Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விம்கோ நகர் - மாதவரம் 'மெட்ரோ' ரயில் நிலையங்களை இணைக்க வலியுறுத்தல்

விம்கோ நகர் - மாதவரம் 'மெட்ரோ' ரயில் நிலையங்களை இணைக்க வலியுறுத்தல்

விம்கோ நகர் - மாதவரம் 'மெட்ரோ' ரயில் நிலையங்களை இணைக்க வலியுறுத்தல்

விம்கோ நகர் - மாதவரம் 'மெட்ரோ' ரயில் நிலையங்களை இணைக்க வலியுறுத்தல்

ADDED : மே 30, 2025 12:35 AM


Google News
திருவொற்றியூர் :'வடசென்னை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் , விம்கோ நகர் - மாதவரம் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க வேண்டும்' என, பாரதி பாசறை தீர்மானம் இயற்றியது.

திருவொற்றியூர் பாரதி பாசறையின், 41ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், திருவொற்றியூரில், இம்மாதம், 25ம் தேதி நடந்தது. தொழிற்சங்க தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். பாசறை செயலர் மா.கி.ரமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அரசு நிதி ஒதுக்கியும், திருவொற்றியூரில், திருவள்ளுவர் கோவில் கட்டுமான பணிகள் இன்னும் துவங்கவில்லை. கட்டுமான பணிகளை உடனே துவக்க வேண்டும்.

விடுதலைப் போராட்ட வீரர், 'ஜெய்ஹிந்த்' செண்பகராமன் பிறந்த நாளை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

வள்ளலார் நகரில், ராமலிங்க அடிகள், 33 ஆண்டுகள் வாழ்ந்த இடத்தை, வள்ளலார் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

வடசென்னை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், விம்கோ நகர் - மாதவரம் மெட்ரோ ரயில் வழித்தடத்தை இணைக்க வேண்டும் உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பாரதி பாசறையின் புதிய தலைவராக தியாகக்குமார், செயலராக மோகன் குமார், பொருளாளராக நடராஜன், ஆலோசகராக நீலகண்டன், கவுரவ தலைவராக, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us