Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கல்லுாரி மாணவர் ஓட்டிய ஜீப் மோதி இருவர் படுகாயம்

கல்லுாரி மாணவர் ஓட்டிய ஜீப் மோதி இருவர் படுகாயம்

கல்லுாரி மாணவர் ஓட்டிய ஜீப் மோதி இருவர் படுகாயம்

கல்லுாரி மாணவர் ஓட்டிய ஜீப் மோதி இருவர் படுகாயம்

ADDED : ஜன 30, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
மயிலாப்பூர், சென்னை, மெரினா கடற்கரையில் இருந்து நுங்கம்பாக்கம் நோக்கி, நேற்று முன்தினம் இரவு சொகுசு ஜீப் ஒன்று அதிவேகமாக வந்தது.

மயிலாப்பூர், ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு சந்திப்பில் வரும்போது, சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி, சில அடி துாரத்திற்கு இழுத்து சென்றது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் படுகாயமடைந்தனர்.

போக்குவரத்து போலீசார், இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணையில், படுகாயமடைந்தவர்கள், மயிலாப்பூரைச் சேர்ந்த அஜய், 19, நிதிஷ், 19, இருவரும் கல்லுாரி மாணவர்கள் என தெரிந்தது.

விபத்து ஏற்படுத்தியது, மேடவாக்கம், சந்தோஷ் புரத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவன் என்பதும், நண்பர்களுடன் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us