/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நெரிசலான சாலைகளில் கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டாம் மாநகராட்சிக்கு போக்குவரத்து போலீசார் கடிதம் நெரிசலான சாலைகளில் கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டாம் மாநகராட்சிக்கு போக்குவரத்து போலீசார் கடிதம்
நெரிசலான சாலைகளில் கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டாம் மாநகராட்சிக்கு போக்குவரத்து போலீசார் கடிதம்
நெரிசலான சாலைகளில் கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டாம் மாநகராட்சிக்கு போக்குவரத்து போலீசார் கடிதம்
நெரிசலான சாலைகளில் கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டாம் மாநகராட்சிக்கு போக்குவரத்து போலீசார் கடிதம்
ADDED : மார் 24, 2025 03:29 AM
அடையாறு:அடையாறு மண்டலத்தில், 168 முதல் 180 வரை, 13 வார்டுகள் உள்ளன.
கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், தரமணி போன்ற பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
இதனால், குறிப்பிட்ட சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்ற சாலைகளில், கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டாம் என, போக்குவரத்து காவல் துறை, மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளது.