Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது

ADDED : பிப் 12, 2024 01:50 AM


Google News
எழும்பூர்,:சென்னை பெரியமேடு, இ.கே.குரு தெருவைச் சேர்ந்தவர் மாசூன், 35; ஹோட்டல் ஊழியர். இரு தினங்களுக்கு முன், மாசூன் வேலை முடித்து, எழும்பூர் வடக்கு ரயில் நிலையம் அருகே நடந்து சென்றார்.

அப்போது, பெண் உட்பட ஐந்து பேர் வந்து, மாசூனை பிளேடால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டனர். புகாரின் படி எழும்பூர் போலீசார் விசாரித்தனர்.

இது தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள், பல்லாவரத்தைச் சேர்ந்த சங்கீதா, 23, சென்ட்ரல் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 24, பெரியமேடு விஜய், 20, என தெரிந்தது. மூவர் மீதும், திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன; இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us