ADDED : ஜன 05, 2024 12:58 AM
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் காதர் மீரான் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு, இந்திரா காந்தி நகர், கரிமேடு பகுதியில், சட்டவிரோதமாக, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குட்கா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த, சரளா, 53, சீதா, 34, பாபு, 32, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 300 மாவா, 40 ஹான்ஸ், 20 கூலிப், 20 ஜர்தா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு பின், மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.