ADDED : மார் 24, 2025 02:19 AM
வியாசர்பாடி:வியாசர்பாடி, தாமோதர் நகர் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில், கஞ்சா விற்பனை நடப்பதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தில், நேற்று போலீசார் ஆய்வு மேற்கொண்டு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்த வியாசர்பாடி, தாமோதர் நகரைச் சேர்ந்த தீபக், 30, பூவரசன், 26, வியாசர்பாடி, இந்திரா நகரைச் சேர்ந்த ஆறுமுகம், 26, ஆகிய மூவரை கைது செய்தனர்.