Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'மொஹரம் சபை' 2ம் நாள் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

'மொஹரம் சபை' 2ம் நாள் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

'மொஹரம் சபை' 2ம் நாள் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

'மொஹரம் சபை' 2ம் நாள் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ADDED : ஜூன் 28, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
சென்னை :தாவூதி போரா முஸ்லிம் சமூகத்தின், 'ஆஷாரா முபாரகா' எனும் 'மொஹரம் சபை'யின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.

பாரிமுனை, மூர் தெருவில் உள்ள, தாவூதி போரா முஸ்லிம் சமூக மசூதியில் நடந்த இந்நிகழ்ச்சி, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடல், கீழ்ப்பாக்கம் விங்ஸ் கன்வென்ஷன் சென்டர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அச்சமூகத் தலைவர் புனித சையத்னா முபாதல் சைபுதீன் பங்கேற்று உரையாற்றினார். ''முகமது நபியின் பேரன் இமாம் ஹுசைன் மற்றும் அவரது குடும்பத்தினரின் தியாக வாழ்வின் அடிப்படையில், வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

இந்நிகழ்வில் 40,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். ஜூலை 5ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்காக, பல்வேறு மாநிலங்கள், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 35,000 தாவூதி போரா முஸ்லிம்கள் சென்னை வந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us