போலீசாரை தாக்கியோருக்கு மாவுக்கட்டு
போலீசாரை தாக்கியோருக்கு மாவுக்கட்டு
போலீசாரை தாக்கியோருக்கு மாவுக்கட்டு
ADDED : செப் 12, 2025 02:47 AM

புளியந்தோப்பு: புளியந்தோப்பு அருகே செங்கை சிவம் மேம்பாலம் அருகே மொபைல் போன் திருடர்களான புளியந்தோப்பை சேர்ந்த ஹர்ஷத், 21, மற்றும் சல்மான் பாஷா, 21, ஆகியோரை போலீசார் பிடிக்கச் சென்ற போது, அவர்கள் போலீசாரை தாக்கினர்.
அவர்களை பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, காவல் நிலையத்தில் இருந்து தப்ப முயன்றபோது, வழுக்கி விழுந்தனர். இதில், ஹர்ஷத்துக்கு காலிலும், சல்மான் பாஷாவுக்கு கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாவுக்கட்டு போடப்பட்டது.
இருவரும், நேற்று நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.