போதையில் நண்பரை வெட்டியவருக்கு வலை
போதையில் நண்பரை வெட்டியவருக்கு வலை
போதையில் நண்பரை வெட்டியவருக்கு வலை
ADDED : பிப் 24, 2024 12:09 AM
எம்.கே.பி.நகர்,கஞ்சா புகைக்கும்போது ஏற்பட்ட தகராறில், நண்பரை வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் குகன், 21; முல்லை நகர் சுடுகாட்டில் மேளம் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
தன் நண்பரான வியாசர்பாடி, நேரு நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்த அஜய், 19, என்பவருடன் சேர்ந்து நேற்று, முல்லை நகர் சுடுகாட்டில் கஞ்சா புகைத்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த அஜய், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குகனின் முகத்தில் வெட்டி விட்டு தப்பினார்.
படுகாயமடைந்த குகனை உறவினர்கள் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான அஜயை தேடி வருகின்றனர்.