ADDED : செப் 01, 2025 01:13 AM
ஓட்டேரி: கொளத்துார், தனம்மாள் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார், 55; அடகு கடைக்காரர்.
இவர் தன் மனைவி சம்தா மற்றும் குடும்பத்தினருடன், நேற்று முன்தினம் மாலை, ஓட்டேரி, எஸ்.பி.ஆர்., டவர் பகுதியில் அருகே நடந்த, அனுமன் பிரசங்க நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியின் இடையே, அவரது மனைவி சம்தாவின் 22 கிராம் செயின் மாயமானது. இது குறித்து ராஜேந்திரகுமார் அளித்த புகாரின்படி ஓட்டேரி போலீ சார் விசாரிக்கின்றனர்.