Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆவடி, கீழ்க்கட்டளையில் நாளை 'தங்கமயில்' ஜுவல்லரி திறப்பு

ஆவடி, கீழ்க்கட்டளையில் நாளை 'தங்கமயில்' ஜுவல்லரி திறப்பு

ஆவடி, கீழ்க்கட்டளையில் நாளை 'தங்கமயில்' ஜுவல்லரி திறப்பு

ஆவடி, கீழ்க்கட்டளையில் நாளை 'தங்கமயில்' ஜுவல்லரி திறப்பு

ADDED : செப் 20, 2025 01:10 AM


Google News
சென்னை, 'தங்கமயில்' ஜுவல்லரியின் புதிய கிளைகள், சென்னை ஆவடி மற்றும் கீழ்க்கட்டளையில், நாளை திறக்கப்படுகிறது.

மதுரையை தலைமையிடமாக கொண்ட 'தங்கமயில்' ஜுவல்லரி, தமிழகம் முழுதும், 64 கிளைகளுடன் செயல்படுகிறது. இதன் 65, 66வது கிளைகள் ஆவடி, கீழ்க்கட்டளையில் நாளை திறக்கப்படுகிறது. திறப்பு விழாவை ஒட்டி, 'தங்க மாங்கல்யம்' எனும் தனித்துவ திருமண நகை கலெக் ஷன்களை அறிமுகம் செய்கிறது.

ஜுவல்லரி நிர்வாகிகள் கூறியதாவது:

தரமான சேவை அளிக்க வேண்டும். ஒவ்வொரு தயாரிப்பையும், நியாயமான விலைக்கு வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையோடு நீண்ட காலம் பயணிக்க வேண்டும். இதுதான் எங்கள் இலக்கு.

வாடிக்கையாளர்கள் பயனடைய, தங்கம் கிராமுக்கு 200 முதல் 500 ரூபாய் வரை தள்ளுபடி; 60 கிராமுக்கு மேல் வாங்கும் தங்க நகைகளுக்கு சேதாரம் 9.99 சதவீதம் தரப்படுகிறது. ஒவ்வொரு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்குவோருக்கு, வைர நகை பர்சேஸில், 7,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். சேதாரத்தில், 20 சதவீதம் தள்ளுபடி உண்டு.

சிறப்பு சலுகையாக, ஒன்று முதல் 10 காரட்டிற்கு மேல் வாங்கும் வைர நகைகளுக்கு, ஒவ்வொரு காரட்டிற்கும், ஒன்று முதல் மூன்று கிராம் வரை தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். வெள்ளி, பிளாட்டினம் நகை வாங்குவோருக்கும் சிறப்பு தள்ளுபடி, நிச்சய பரிசு உண்டு. இச்சலுகை, வரும் அக்., 5ம் தேதி வரை, புதிதாக திறக்கப்படும் இரு கிளைகளிலும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us