ADDED : பிப் 06, 2024 12:39 AM
தாம்பரம், குரோம்பேட்டை - பல்லாவரம் இடையே நேற்று முன்தினம் இரவு, தண்டவாளத்தை கடக்க முயன்ற, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தார்.
போலீசார், அவரது உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊர் குறித்த விபரங்கள் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.