/உள்ளூர் செய்திகள்/சென்னை/பிரசவத்தில் திடீர் சிக்கல் தாய்- -- சேய் உயிரிழப்புபிரசவத்தில் திடீர் சிக்கல் தாய்- -- சேய் உயிரிழப்பு
பிரசவத்தில் திடீர் சிக்கல் தாய்- -- சேய் உயிரிழப்பு
பிரசவத்தில் திடீர் சிக்கல் தாய்- -- சேய் உயிரிழப்பு
பிரசவத்தில் திடீர் சிக்கல் தாய்- -- சேய் உயிரிழப்பு
ADDED : ஜன 04, 2024 12:25 AM

உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகரைச் சேர்ந்தவர் ரகோத்தம்மன், 35; விவசாயி.
இவரது மனைவி, நிறைமாத கர்ப்பிணியான சத்யாவுக்கு, 31, நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதால், மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
நிலைய மருத்துவர் லத்திகா மற்றும் செவிலியர்கள் இருவர் இணைந்து, பிரசவம் பார்த்தனர். அதிகாலை 12:00 மணிக்கு, சத்யாவிற்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சத்யாவிற்கு தொடர்ந்து ரத்தப்போக்கு இருந்ததால், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அனுப்பினர்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சத்யா ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
தாய் --- சேய் இறந்ததை அறிந்த அவரது உறவினர்கள், சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசார் வந்து சமரசப்படுத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்தனர்.
உத்திரமேரூர் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் உமாதேவி கூறுகையில், ''சரியான சிகிச்சை அளிக்கப்பட்டது.
''எனினும், தாய் - சேய் இறந்தது வருத்தம் அளிக்கிறது. இறப்புக்கான மருத்துவ ரீதியான காரணங்கள் ஆராயப்படும்,''என்றார்.