Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தண்டவாள பகுதிகளில் தெருவிளக்கு அவசியம்

தண்டவாள பகுதிகளில் தெருவிளக்கு அவசியம்

தண்டவாள பகுதிகளில் தெருவிளக்கு அவசியம்

தண்டவாள பகுதிகளில் தெருவிளக்கு அவசியம்

ADDED : மே 19, 2025 01:02 AM


Google News
திருவொற்றியூர்:திருவொற்றியூர் மண்டலத்தில், வார்டு - 2 முதல் 10 வரையிலும் வார்டு - 12 மற்றும் 13ம் வார்டுகளிலும், தண்டவாளங்களை ஒட்டி, பல தெருக்கள் உள்ளன. இங்கு, இரவு வேளைகளில் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், வழிப்பறி அச்சம், குற்றச்சம்பவங்கள் அரங்கேறும் நிலை உள்ளது.

இரவு வேளையில், ரயில் மோதி உயிருக்கு போராடுவோரை மீட்க கூட முடியாத நிலையில், கும்மிருட்டாக உள்ளது.

மண்டலம் முழுதும் தெருவிளக்குகள் அமைக்கும் மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகள், இங்கு மட்டும் தெருவிளக்குகள் அமைப்பதில்லை.

இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, 'ரயில்வே நிர்வாகம், தண்டவாளங்களை ஒட்டி தெருவிளக்குகள் அமைப்பதற்கு அனுமதி அளிப்பது கிடையாது.

இதன் காரணமாகவே, இங்கு தெருவிளக்குகள் அமைக்க முடிவதில்லை. ரயில்வேயிடம் அனுமதி பெற்றால், நிச்சயம் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்க முடியும்' எனக் கூறுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us