/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில தடகள போட்டியில் ஸ்ரீபெரும்புதூர் கிளப் அசத்தல் மாநில தடகள போட்டியில் ஸ்ரீபெரும்புதூர் கிளப் அசத்தல்
மாநில தடகள போட்டியில் ஸ்ரீபெரும்புதூர் கிளப் அசத்தல்
மாநில தடகள போட்டியில் ஸ்ரீபெரும்புதூர் கிளப் அசத்தல்
மாநில தடகள போட்டியில் ஸ்ரீபெரும்புதூர் கிளப் அசத்தல்
ADDED : ஜூன் 11, 2025 01:00 AM

சென்னை, மாநில அளவில் நடந்த தடகளப் போட்டியில், 16 வயது பிரிவில், காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் அத்லெடிக் கிளப் மாணவியர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி, அசத்தியுள்ளனர்.
தமிழ்நாடு தடகள சங்கம், கோவை தடகள சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான தடகளப் போட்டிகள், கோவை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 8 ம் தேதி நடந்தது. இதில் மாநிலத்தின் 2,000க்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
போட்டி 16 வயதுக்குட்பட்டோர், 18 வயதுக்குட்பட்டோர் மற்றும் ஓப்பன் டு ஆல் என, மூன்று பிரிவாக நடந்தது. இதன் 16 வயது மாணவியர் பிரிவில், ஸ்ரீபெரும்புதுார் கிளப் மாணவியர் அதிக புள்ளிகள் பெற்று, அந்தப் பிரிவின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
இதன் 16 வயது பெண்கள் 600 மீ., பிரிவு ஓட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் கிளப்பை சேர்ந்த மதுமிதா தணிகாச்சலம் 1.42 வினாடியிலும், அதே ஓட்டத்தில் ஹாசினி மோகன் 1.43 வினாடியில் இலக்கை அடைந்து, முதல் இரு இடங்களை பிடித்துள்ளனர்.
தொடர்ந்து நடைபெற்ற மிடிலி ரிலேவில் ஸ்ரீபெரும்புதூர் கிளப்பின் டோமிகா, சக்தி ஸ்ரீ, மதுமிதா, ஹாசினி ஆகியோர் முதல் இடம் பிடித்து, தங்க பதக்கத்தை கைபற்றியுள்ளனர்.
மாணவியரின் சாதனைக்கு உதவியாக இருந்த ஸ்ரீபெரும்புதுார் அத்தலேடிக் கிளப்பின் பயிற்சியாளர் வீரபத்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.