ADDED : ஜூன் 03, 2025 12:26 AM
சென்னை, தண்டையார்பேட்டை, 34வது வார்டுக்கு உட்பட்ட சீதாராம் நகர் மயானபூமி எரிவாயு தகனமேடையில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், நாளை முதல் 24ம் தேதி வரை மயானபூமி இயங்காது.
இந்நாட்களில் அருகில் உள்ள முல்லை நகர் எரிவாயு தகன மேடையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.