Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அங்காடி கட்டுமான பணிகள் திருவொற்றியூரில் துவக்கம்

அங்காடி கட்டுமான பணிகள் திருவொற்றியூரில் துவக்கம்

அங்காடி கட்டுமான பணிகள் திருவொற்றியூரில் துவக்கம்

அங்காடி கட்டுமான பணிகள் திருவொற்றியூரில் துவக்கம்

ADDED : மே 30, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
திருவொற்றியூர், திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் தெருவில் காய்கறி, பழம் உள்ளிட்டவற்றின் சந்தை உள்ளது.

இதன் கட்டடம் பலவீனமாக இருந்ததால், 9.78 கோடி ரூபாய் செலவில், நவீன அங்காடி அமைக்க திட்டமிடப்பட்டது. இதுகுறித்து, வியாபாரிகளிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கடைகளை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில் கட்டப்படும் சந்தைக்கான பணியை, வீடியோ 'கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

புதிய சந்தையில்

அமைக்கப்படும் கடைகள்கடைகள் எண்ணிக்கைமீன் 120பழம் 20காய்கறி 80பலசரக்கு 48இறைச்சி 32மொத்தம் 300-மொத்தம் 30,000 சதுர அடி பரப்பளவில் இக்கடைகள் அமைகின்றன. 24 மாதங்களில் பணி முடித்து, பயனாளிகளுக்கு கடைகள் ஒப்படைக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us