/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரூ.1.50 கோடி குட்கா ரசாயனம் ஊற்றி அழிப்புரூ.1.50 கோடி குட்கா ரசாயனம் ஊற்றி அழிப்பு
ரூ.1.50 கோடி குட்கா ரசாயனம் ஊற்றி அழிப்பு
ரூ.1.50 கோடி குட்கா ரசாயனம் ஊற்றி அழிப்பு
ரூ.1.50 கோடி குட்கா ரசாயனம் ஊற்றி அழிப்பு
ADDED : பிப் 24, 2024 12:17 AM
பூந்தமல்லி, சென்னை ஆவடி, மாதவரம், போரூர், பூந்தமல்லி சுற்றுவட்டாரங்களில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் வாயிலாக, போலீஸ் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையினரால், 10,000 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 1.5 கோடி ரூபாய்.
நேற்று, பூந்தமல்லி நகராட்சியில் உள்ள, ஆர்.சி.சி., கிடங்கில், 20 அடி பள்ளத்தில் இந்த குட்கா குவிக்கப்பட்டு, ரசாயனம் ஊற்றி அழிக்கப்பட்டது.
அப்போது, உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், மதுவிலக்கு உதவி கமிஷனர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.