Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரூ.9 லட்சம் சீட்டு மோசடி பெரம்பூர் நபருக்கு 'காப்பு'

ரூ.9 லட்சம் சீட்டு மோசடி பெரம்பூர் நபருக்கு 'காப்பு'

ரூ.9 லட்சம் சீட்டு மோசடி பெரம்பூர் நபருக்கு 'காப்பு'

ரூ.9 லட்சம் சீட்டு மோசடி பெரம்பூர் நபருக்கு 'காப்பு'

ADDED : மார் 19, 2025 12:18 AM


Google News
திரு.வி.க.நகர், கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சசிகலா, 36, இவருடன் சேர்ந்து 60க்கும் மேற்பட்டவர்கள் பெரம்பூரைச் சேர்ந்த சாந்தகுமார், 58, என்பவரிடம் தீபாவளி சீட்டு சேர்ந்துள்ளனர்.

இவர்கள், மாதம் 1,500 மற்றும் 1,300 ரூபாய் வீதம், கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சீட்டு கட்டி வந்துள்ளனர். சீட்டு கட்டி முடித்த நிலையில், சொன்னபடி தங்க நகை மற்றும் பணம் திரும்ப தர வேண்டியது இருந்தது. ஆனால் சாந்தகுமார் தங்கம் விலை உயர்ந்ததை சுட்டிக்காட்டி, கடந்தாண்டு நவம்பர் முதல் வாரத்தில் நகை மற்றும் பணத்தை தருவதாக கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி எதுவும் தராததால், திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் சசிகலா புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் நடத்திய விசாரணையில், சாந்தகுமார் 9 லட்ச ரூபாய் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து திரு.வி.க.நகர் போலீசார் சாந்தகுமாரை நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us