Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சார் பதிவாளர் அலுவலகம் அருகே காரிலிருந்த ரூ.6 லட்சம் கொள்ளை

சார் பதிவாளர் அலுவலகம் அருகே காரிலிருந்த ரூ.6 லட்சம் கொள்ளை

சார் பதிவாளர் அலுவலகம் அருகே காரிலிருந்த ரூ.6 லட்சம் கொள்ளை

சார் பதிவாளர் அலுவலகம் அருகே காரிலிருந்த ரூ.6 லட்சம் கொள்ளை

ADDED : மார் 17, 2025 11:59 PM


Google News
படப்பை,ராயப்பேட்டையை சேர்ந்தவர் முசாமில் அகமது, 39. இவர், சிந்தாதிரிப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பணஞ்சேரியில் உள்ளது.

இந்த நிலத்தை, வேறொருவர் பெயரில் பத்திர பதிவு செய்ய, நேற்று படப்பை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, மாருதி ஸ்விப்ட் காரில் தன் தந்தையுடன் சென்றார்.

நிலத்திற்கான, ஆறு லட்சம் ரூபாயை ஜெகத்குமார் என்பவரிடம் பெற்று, தன் காரில் வைத்தார். பின், சார்பாதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு பணிகளை முடித்து, வீட்டிற்கு புறப்பட காருக்கு வந்தார்.

அப்போது, கார் கண்ணாடியை உடைத்து, மர்ம நபர்கள், காரில் வைத்திருந்த ஆறு லட்சம் ரூபாயை திருடிச் சென்றது தெரிய வந்தது.

மணிமங்கலம் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்தும், காரில் பதிவான கை ரேகைகளை சேகரித்தும், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us