ADDED : ஜன 29, 2024 01:28 AM
கொளத்துார்:கொளத்துார், அண்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக, நேற்று முன்தினம் காலை, அண்ணா நகர், டி.வி.எஸ்., காலனியைச் சேர்ந்த ராகுல் போத்ரா, 26, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், கொளத்துாரைச் சேர்ந்த ரவீன், 27, மற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த அபிஷேக், 26, ஆகியோரை கைது செய்து, 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.