ADDED : மார் 11, 2025 07:20 PM
சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. மாலை 3:00 மணிக்கு காற்றுடன் மழை பெய்ய துவங்கியது.
இலங்கையில் இருந்து சென்னைக்கு மாலை 3:00 மணிக்கு வந்த விமானம், பெங்களூரில் இருந்து வந்த விமானம், மதுரையிலிருந்து வந்த 2 விமானங்கள், கோவை, துாத்துக்குடி, துர்காப்பூர், அந்தமான் உள்ளிட்ட ஒன்பது விமானங்கள், அரை மணி நேரத்திற்கு மேலாக, வானில் தொடர்ந்து வட்டமடித்து கொண்டிருந்தன. மழைவிட்டபின் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.
அதேபோல, சென்னையில் இருந்து எட்டு நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.