Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மழை வானில் வட்டமடித்த விமானங்கள்

மழை வானில் வட்டமடித்த விமானங்கள்

மழை வானில் வட்டமடித்த விமானங்கள்

மழை வானில் வட்டமடித்த விமானங்கள்

ADDED : மார் 11, 2025 07:20 PM


Google News
சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. மாலை 3:00 மணிக்கு காற்றுடன் மழை பெய்ய துவங்கியது.

இலங்கையில் இருந்து சென்னைக்கு மாலை 3:00 மணிக்கு வந்த விமானம், பெங்களூரில் இருந்து வந்த விமானம், மதுரையிலிருந்து வந்த 2 விமானங்கள், கோவை, துாத்துக்குடி, துர்காப்பூர், அந்தமான் உள்ளிட்ட ஒன்பது விமானங்கள், அரை மணி நேரத்திற்கு மேலாக, வானில் தொடர்ந்து வட்டமடித்து கொண்டிருந்தன. மழைவிட்டபின் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.

அதேபோல, சென்னையில் இருந்து எட்டு நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us