Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து போன் பறிப்பு

வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து போன் பறிப்பு

வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து போன் பறிப்பு

வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து போன் பறிப்பு

ADDED : மே 24, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
சென்னை:உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமித்கோலியா, 28; கிரேன் ஆப்பரேட்டர். கடந்த 9ம் தேதி காலை, திருவள்ளூர் செல்வதற்காக, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய மின்துாக்கி அருகே நின்றிருந்தார்.

அங்கு வந்த நபர், 'மொபைல் போன் வாயிலாக டிக்கெட் எடுத்து தருகிறேன்' எனக்கூறி, அவரது மொபைல் போனை வாங்கி தப்பினார்.

பெரியமேடு போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போனை பறித்துச் சென்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்தயாள்லக்காரா, 30, என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், கடந்த மூன்று மாதங்களாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில், வடமாநில பயணியரை குறிவைத்து டிக்கெட் எடுத்து தருவதாக கூறி, மொபைல் போனை பறித்துச் சென்றது தெரிய வந்தது.

தொடர்ந்து, திருவல்லிக்கேணியில் மொபைல் போன் கடை நடத்தி வரும் நவ்சாத் அலி என்பவரிடம் விற்று, பணம் பெற்றதும் தெரிய வந்தது.

இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், 22 மொபைல் போன்கள்மற்றும் ஒரு மடிக்கணினியை பறிமுதல் செய்தனர்.

கைதான ராம்தயாள் லக்காரா மீது, ஏற்கனவே இரு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us