Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புழல் சிறையில் போன் பறிமுதல்

புழல் சிறையில் போன் பறிமுதல்

புழல் சிறையில் போன் பறிமுதல்

புழல் சிறையில் போன் பறிமுதல்

ADDED : ஜூலை 02, 2025 12:25 AM


Google News
புழல்: புழல் சிறையின் உயர் பாதுகாப்பு பிரிவில், மொபைல் போன்கள், சார்ஜர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புழல் தண்டனை சிறை உயர் பாதுகாப்பு பிரிவில், கூலிப்படை கும்பல் தலைவர்கள் அரும்பாக்கம் ராதா, 'சிடி' மணி, மதுரை வெள்ளை காளி ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இங்கு சிறை அதிகாரிகள் நேற்று நடத்திய திடீர் சோதனையில், இரண்டு ஐ - போன்கள், ஒரு ஆண்ட்ராய்டு போன், இரு பட்டன் மொபைல்போன்கள் மற்றும் இரண்டு சார்ஜர்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து, புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us