Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருநீர்மலை ரங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்

திருநீர்மலை ரங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்

திருநீர்மலை ரங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்

திருநீர்மலை ரங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்

ADDED : மார் 19, 2025 12:05 AM


Google News
திருநீர்மலை, திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருநீர்மலையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலில், நான்கு கோலங்களில், பெருமாள் காட்சி அளிக்கிறார்.

சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டு தோறும், பங்குனி விழா நடந்து வருகிறது. இந்தாண்டு, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 17ம் தேதி துவங்கி வரும் 26ம் தேதி வரை, பத்து நாட்கள் நடக்கும் விழாவில், வரும் 21ம் தேதி கருட சேவையும், 23ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us