Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மகப்பேறு மருத்துவமனை திறப்பு ஷெனாய் நகரில் மீண்டும் தாமதம்

மகப்பேறு மருத்துவமனை திறப்பு ஷெனாய் நகரில் மீண்டும் தாமதம்

மகப்பேறு மருத்துவமனை திறப்பு ஷெனாய் நகரில் மீண்டும் தாமதம்

மகப்பேறு மருத்துவமனை திறப்பு ஷெனாய் நகரில் மீண்டும் தாமதம்

ADDED : மே 31, 2025 03:29 AM


Google News
Latest Tamil News
ஷெனாய் நகர்:அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டு, ஷெனாய் நகர், புல்லா அவென்யூவில், சென்னை மாநகராட்சியின் பழைய நகர்புற சுகாதார மையம் செயல்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கையடுத்து, அதேபகுதியில், நவீன நகர்ப்புற மகப்பேறு மருத்துவமனை, மாநகராட்சியால் கட்டப்பட்டது.

மூன்று மாடி கட்டடத்தில், தரை தளத்தில் அவசர பிரிவு, எக்ஸ் ரே பிரிவு மற்றும் ஆய்வகம் அமைக்கப்பட்டது.

மேல் தளங்களில் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் சிகிச்சை பெறும் வார்டுகள், ஒரு டயாலிசிஸ் பிரிவு, ஒரு கூட்டரங்கு, ஆர்.ஓ., பிளாண்ட் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.

கடந்த நவ., மாதமே 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு தாமதமானதால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இம்மருத்துவமனையை, முதல்வர் திறப்பதாக நேற்று தகவல்கள் வெளியானதால், மீண்டும் ஒரு வாரமாக, பணிகள் மும்முரமாக நடந்தன. ஆனால் நேற்று, முதல்வருக்கு நேரமில்லாததால், மருத்துவமனை திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

அமைந்தகரையில், நகர்ப்புற மகப்பேறு மருத்துவமனை கிடையாது. ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது.

உயர் சிகிச்சை பெற, அயனாவரம் அல்லது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும்.

தற்போது, ஷெனாய் நகரிலேயே பெரிய அளவில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் பெயரை காரணம் காட்டி, மருத்துவமனை திறப்பு தள்ளி போகிறது. மருத்துவமனையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us