Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஆம்னி பஸ் நிலைய பிரச்னை எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை

ஆம்னி பஸ் நிலைய பிரச்னை எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை

ஆம்னி பஸ் நிலைய பிரச்னை எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை

ஆம்னி பஸ் நிலைய பிரச்னை எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை

ADDED : ஜன 12, 2024 12:45 AM


Google News
முடிச்சூர், ஆம்னி பேருந்து நிலையத்தில் அமைக்கப்படும் கால்வாயை மாற்றி அமைக்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு செல்ல ஆம்னி பேருந்து நிலையம் வழியாக பாதை அமைத்து தர வேண்டும் என, தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜாவிடம் முடிச்சூர் ஊராட்சி விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில், வெளிவட்ட அணுகு சாலையை ஒட்டியுள்ள சி.எம்.டி.ஏ., இடத்தில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த இடத்திற்கு பின்புறம், 150 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்திற்கு செல்ல பாதை வசதி இல்லை.

ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தில் கட்டப்படும் கால்வாய் விவசாய நிலத்தில் விடப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

இதனால், கால்வாயை மாற்றி அமைக்கவும், விவசாய நிலங்களுக்கு செல்ல ஆம்னி பேருந்து நிலையம் வழியாக பாதை அமைத்து தர வேண்டும் என்றும், தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜாவை சந்தித்து முடிச்சூர் ஊராட்சி விவசாயிகள் மனு கொடுத்தனர்.

சி.எம்.டி.ஏ., அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதி அளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us