செய்திகள் சில வரிகளில்... வடசென்னை
செய்திகள் சில வரிகளில்... வடசென்னை
செய்திகள் சில வரிகளில்... வடசென்னை
ADDED : செப் 16, 2025 01:11 AM
பாலியல் தொழில்திருவண்ணாமலைநபருக்கு 'காப்பு'
கொரட்டூர்: விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், கொரட்டூர் 44வது தெருவில் உள்ள வீட்டில் கடந்த 12ம் தேதி சோதனை செய்தனர்.
அங்கு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன், 40 என்பவர், இரண்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரிய வந்தது.
இரண்டு பெண்களையும் மீட்டு, மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்த போலீசார், பாலமுருகனை கைது செய்தனர்.