/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருவீதி அம்மன் கோவில் தெருவுக்கு புதிய சாலை அமைப்பதில் அலட்சியம் திருவீதி அம்மன் கோவில் தெருவுக்கு புதிய சாலை அமைப்பதில் அலட்சியம்
திருவீதி அம்மன் கோவில் தெருவுக்கு புதிய சாலை அமைப்பதில் அலட்சியம்
திருவீதி அம்மன் கோவில் தெருவுக்கு புதிய சாலை அமைப்பதில் அலட்சியம்
திருவீதி அம்மன் கோவில் தெருவுக்கு புதிய சாலை அமைப்பதில் அலட்சியம்
ADDED : மே 22, 2025 12:35 AM

அமைந்தகரை அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டில் அமைந்தகரை, மஞ்சக்கொல்லை தெரு மற்றும் திருவீதி அம்மன் கோவில் தெருக்கள் உள்ளள. இந்த பகுதியில் 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
அங்கு, 10 ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் சாலை போடப்பட்டது. பின், பல்வேறு காரணங்களுக்காக பள்ளம் தோண்டப்பட்டு, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இங்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என, எட்டு ஆண்டுகளுக்கு மேல் முதல்வர், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட துறைகளுக்கு, பகுதிவாசிகள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
இது தொடர்பாக, நம் நாளிதழில் அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, இங்கு சாலை அமைப்பதற்காக, 16.72 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
சாலை பணிக்கு முன், 2023 அக்., மாதம் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கின. பல இழுபறிக்கு பின், இந்தாண்டு துவக்கத்தில், 90 சதவீத பணிகள் முடிந்தன. தொடர்ந்து, புதிய சாலை பணியை துவங்காமல், அரைகுறையாக விட்டுவிட்டனர்.
இதனால், அவ்வப்போது பெய்யும் மழையால் சாலை முழுதும் குண்டும் குழியுமாக மாறி, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
இப்பகுதியில் கதிரவன் காலனி, அய்யாவு தெரு உள்ளிட்ட இடங்களில், பல மாதங்களுக்கு முன்பே புதிய சாலை அமைக்கப்பட்டது. ஆனால், திருவீதி அம்மன் கோவில் தெருக்களில் அப்பணி நடக்கவில்லை. மாநகராட்சி அதிகாரியின் அலட்சியப்போக்கால், இப்பணிகள் முடங்கியுள்ளன. தற்போது பெய்து வரும் மழையால், சாலை முழுதும் சேறும், சகதியுமாக மாறி கடும் வேதனைகளை சந்திக்கிறோம். விரைவில் புதிய சாலை அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாஜித் பாஷா,
சமூக ஆர்வலர், அண்ணா நகர்