/உள்ளூர் செய்திகள்/சென்னை/'புத்தக கண்காட்சிக்கு இனி நந்தனம் மைதானம் போதாது''புத்தக கண்காட்சிக்கு இனி நந்தனம் மைதானம் போதாது'
'புத்தக கண்காட்சிக்கு இனி நந்தனம் மைதானம் போதாது'
'புத்தக கண்காட்சிக்கு இனி நந்தனம் மைதானம் போதாது'
'புத்தக கண்காட்சிக்கு இனி நந்தனம் மைதானம் போதாது'

சென்னை புத்தகக்காட்சி கடந்து வந்த பாதை?
சென்னையில் புத்தகக்காட்சியை வெறும் 20 அரங்குகளுடன் துவங்கி, தற்போது 1,000 அரங்குகளை நோக்கி நடைபோட பலர் உழைத்திருக்கின்றனர். அது 47 ஆண்டு கதை.
தற்போதைய புத்தகக்காட்சி பற்றி?
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கும் புத்தகக்காட்சி பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வருகின்றனர். ஆனால், இது வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் போதுமானதாக இல்லை. வாசகர்களின் எண்ணிக்கைக்கு, இங்குள்ள வசதிகள் போதவில்லை.
தமிழக அரசு நிதி தருகிறதே?
ஆம். அது எந்த ஆட்சியாக இருந்தாலும், வாசிப்பையும், புத்தக விற்பனையையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கம் உடையதாக உள்ளது. அதனால் தான் நிதி உதவி செய்கிறது. ஆனால், அந்த நிதியிலிருந்து வசதிகள் செய்யப்படுவதில்லை.
என்னென்ன வசதிகள் வேண்டும்?
நிதியுதவியை வைத்து, வாசகர்களுக்கான வசதிகளை செய்ய வேண்டும். பொதுவாக நந்தனம் வளாக அரங்கில் காற்றோட்ட வசதி இல்லை. மழை போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து புத்தகங்களை பாதுகாப்பது அவசியம். ஆனால், இங்கு கூரை ஒழுகுகிறது, தரை வழுக்குகிறது. இதை சரி செய்து, வாசகர்களுக்கு வசதிகளை செய்ய, இந்த மானியத்தை பயன்படுத்த வேண்டும்.
என்னென்ன செயல்படுத்தலாம்?
குழந்தைகள், பெண்கள், தமிழ், ஆங்கிலம் என, தனித்தனி வகைப்பாடுகளுக்கு தனித்தனியான வரிசைகளை உருவாக்க வேண்டும். அப்போது தான், நெரிசல் இன்றி தங்களுக்கான புத்தகங்களை வாசகர்கள் தேர்வு செய்வர். அரங்குகளை பெற விரும்பும் உறுப்பினர்களுக்கு, கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.