Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கார் ஓட்டுநரை கடத்தி பணம் பறித்த ம ூன்ற ு ப ேர் கைது

 கார் ஓட்டுநரை கடத்தி பணம் பறித்த ம ூன்ற ு ப ேர் கைது

 கார் ஓட்டுநரை கடத்தி பணம் பறித்த ம ூன்ற ு ப ேர் கைது

 கார் ஓட்டுநரை கடத்தி பணம் பறித்த ம ூன்ற ு ப ேர் கைது

ADDED : டிச 01, 2025 01:18 AM


Google News
அரும்பாக்கம்: கார் ஓட்டுநரை கடத்தி பணம் பறித்த இரண்டு வழக்கறிஞர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மது பிரசாந்த் 24; கார் ஓட்டுநர். இவர், அரும்பாக்கத்தில் உள்ள ஜெகதீசன், 24 என்பவர், நடத்தும் தனியார் டிராவல்சில் கார் ஓட்டுநராக பணிபுரிந்தார்.

பின், அவர் சொந்த கார் வாங்கியதால் பணியில் இருந்து விலகியதாக தெரிகிறது. பணியில் சேர்ந்தபோது ஜெகதீசனிடம் கொடுத்த ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை மது பிரசாந்த் திரும்ப கேட்டுள்ளார்.

ஆவணங்களை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்து வாங்கிக் கொள்ளுமாறு ஜெகதீசன் அறிவுறுத்தியுள்ளார். இதை நம்பி, மது பிரசாந்த் நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நின்றிருந்தார். அப்போது காரில் நண்பர்களுடன் வந்த ஜெகதீசன், மது பிரசாந்தை காரில் கடத்தி, அரும்பாக்கம் என்.எஸ்.கே., நகர் அருகில் வைத்து தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அவரது வங்கிக் கணக்கில் இருந்து 11,000 ரூபாயை 'ஆன்லைன்' பரிவர்த்தனை வாயிலாக மாற்றி கொண்டு, மற்றொரு இடத்தில் இறக்கி விட்டு தப்பினர்.

இதுகுறித்து மது பிரசாந்த் அரும்பாக்கம் போலீசில் நேற்று புகார் அளித்தார். விசாரித்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ஜெகதீசன், 24, அவருக்கு உடந்தையாக இருந்த அமைந்தகரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தினேஷ் குமார் 24, சுதர்சன், 24 ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மது பிரசாந்த் உடன் பணிபுரிந்த அரி என்பவர் கொடுக்க வேண்டிய பணத்திற்காக, இவரை கடத்தித் தாக்கியது தெரிய வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us